

நேற்று முன்தினம் இரவு திருநீர்மலை மெயின் ரோட்டில் நிறுத்தப்பட்டிருந்த லாரிகளை பார்த்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பினார்.
அப்போது 4 பேர் வழியில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர். அவர்களிடம் வழிவிடுமாறு அந்தோணி மகேஷ் கூறினார். இதில் இருதரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது.
இதில் ஆத்திரம் அடைந்த 4 பேரும் சேர்ந்து அந்தோணி மகேசை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் முகத்தில் காயமடைந்த அவர், அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இது குறித்து சங்கர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருநீர்மலையை சேர்ந்த கிருபைநாதன் (22), சரவணன் (24) ஆகிய 2 பேரை கைது செய்தனர். தலைமறை வாக உள்ள ரூபன், கவுதம் ஆகியோரை தேடி வருகின்றனர்.