பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்

பஸ் கட்டண உயர்வை கண்டித்து திருவண்ணாமலையில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை, அண்ணாசிலை அருகில் திருவண்ணாமலை தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் காங்கிரஸ்., ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சி, முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, விவசாய தொழிலாளர்கள் கட்சி மற்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகிய கூட்டணி கட்சிகள் கலந்து கொண்டன.

பஸ் கட்டண உயர்வு, ஜனநாயக ரீதியில் போராடும் மக்கள் மீது நடத்தப்படும் தடியடி ஆகியவற்றை கண்டித்தும், பஸ் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆர்.சிவானந்தம் தலைமை தாங்கினார்.

இதில் எம்.எல்.ஏ.க்கள் கு.பிச்சாண்டி, மு.பெ.கிரி, கே.வி.சேகரன், எஸ்.அம்பேத்குமார், தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் செங்கம் ஜி.குமார், வடக்கு மாவட்ட தலைவர் வி.பி.அண்ணாமலை, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆரணி டி.ராஜா, இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் கு.ஜோதி, மாநில குழு உறுப்பினர் வே.முத்தையன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் த.வேணுகோபால், மாவட்ட துணைச் செயலாளர் சாவல்பூண்டி மா.சுந்தரேசன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், வடக்கு மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட அவைத்தலைவர் கே.ஆர்.சீதாபதி, டாக்டர் எ.வ.வே.கம்பன், தெற்கு மாவட்ட அமைப்பாளர்கள் சி.என்.அண்ணாதுரை, வழக்கறிஞர் கே.வி.மனோகரன், பொன்.முத்து, ரா.ஜீவானந்தம், ம.தி.மு.க.வை சேர்ந்த எல்.பாசறை பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com