ஏரல் அருகே தி.மு.க. வாக்குசாவடி முகவர்கள் கூட்டம் கனிமொழி எம்.பி. பங்கேற்பு

ஏரல் அருகே தி.மு.க. வாக்குசாவடி முகவர்கள் கூட்டம் நடந்தது. இதில் கனிமொழி எம்.பி. பங்கேற்றார்.
ஏரல் அருகே தி.மு.க. வாக்குசாவடி முகவர்கள் கூட்டம் கனிமொழி எம்.பி. பங்கேற்பு
Published on

ஏரல்,

ஏரல் அருகே சிவகளையில் தி.மு.க. வாக்குசாவடி முகவர்கள் கூட்டம் நடந்தது. தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. பேசினார். அவர் பேசுகையில், தி.மு.க. சார்பில் ஒவ்வொரு வாக்குசாவடிக்கும் 20 வாக்குசாவடி முகவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஒவ்வொரு வாக்குசாவடி முகவரும் 10 முதல் 15 வாக்காளர்களை உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்க செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசின் மக்கள் விரோத கொள்கைகளால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்களிடம் விளக்கி கூறி, உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரிக்க வேண்டும் என்று கூறினார். பின்னர் அவர், பொதுமக்களுக்கு தையல் எந்திரம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மாநில பொதுக்குழு உறுப்பினர் சொர்ணகுமார், ஒன்றிய செயலாளர்கள் ரவி, ஜோசப், பார்த்தீபன், ஒன்றிய துணை செயலாளர் வாழவள்ளான், நட்டாத்தி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பண்டாரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக உடன்குடி அருகே மணப்பாடு திருச்சிலுவை ஆலயம் முன்பு கனிமொழி எம்.பி. தனது பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9 லட்சம் செலவில் உயர்கோபுர மின்விளக்கு அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com