குடும்பம் நடத்த மனைவியை அனுப்பாததால் கத்தியால் குத்தி மாமியார் கொலை; மருமகன் கைது

மண்ணிவாக்கத்தில் குடும்பம் நடத்த மனைவியை அனுப்பி வைக்காததால், மாமியாரை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
குடும்பம் நடத்த மனைவியை அனுப்பாததால் கத்தியால் குத்தி மாமியார் கொலை; மருமகன் கைது
Published on

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 32). கூலித்தொழிலாளியான இவர் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு மண்ணிவாக்கம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த சுஷ்மிதா (24), என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். இந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சதீஷ்குமாருக்கும், சுஷ்மிதாவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் தனது கணவருடன் கோபித்துக்கொண்டு சுஷ்மிதா மண்ணிவாக்கம் இந்திரா நகரில் உள்ள தனது தாயார் சித்ரா (40), வீட்டிற்கு சென்றுவிட்டார். இதற்கிடையே சதீஷ்குமார் தனது மனைவியை குடும்பம் நடத்த வருமாறு பலமுறை அழைத்து உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com