வயல்களில் தேங்கிய நீரை வெளியேற்ற வடிகால்கள் அமைக்க வேண்டும் - விவசாயிகளுக்கு, மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்

வயல்களில் தேங்கிய நீரை வெளியேற்ற வடிகால்கள் அமைக்க வேண்டும் என்று விவசாயிகளுக்கு, மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வயல்களில் தேங்கிய நீரை வெளியேற்ற வடிகால்கள் அமைக்க வேண்டும் - விவசாயிகளுக்கு, மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது.,

திருவள்ளூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் சொர்ணவாரி பருவத்தில் 23 ஆயிரத்து 234 ஹெக்டர் நெல் நடவு செய்யப்பட்டு 80 சதவீதம் பயிர்கள் அறுவடை முடிந்துள்ளது. 20 சதவிகிதம் பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. மேலும் 5 ஆயிரம் ஹெக்டர் நெல் சம்பா பருவத்தில் நடவு செய்யப்பட்டுள்ளது.

இதில் சில வட்டாரங்களில் தாழ்வான பகுதிகளிலும் விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். தற்போது தென்மேற்கு பருவமழை முடிவடையும் தருவாயில், வடகிழக்கு பருவமழை ஆரம்பித்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக இயல்பான மழையை விட அதிகமான மழை பெய்து உள்ளது.

எனவே தாழ்வான பகுதிகளில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயார் நிலையில் இருக்கும் நெல் வயல்களில் வடிகால் வசதி செய்து தேங்கிய நீரை வெளியேற்றவும் முதிர்ச்சி அடைந்த நெற்பயிர்களை சரியான நேரத்தில் அறுவடை செய்யவும் விவசாயிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com