பூதப்பாண்டி அருகே மது குடிக்க தாய் பணம் கொடுக்காததால் வாலிபர் தற்கொலை போலீசார் விசாரணை

பூதப்பாண்டி அருகே மது குடிக்க தாய் பணம் கொடுக்காததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு.
பூதப்பாண்டி அருகே மது குடிக்க தாய் பணம் கொடுக்காததால் வாலிபர் தற்கொலை போலீசார் விசாரணை
Published on

பூதப்பாண்டி,

பூதப்பாண்டி அருகே குறத்தியறை பகுதியை சேர்ந்தவர் மணி. இவருடைய மனைவி லீலா. இவர்களுக்கு சந்தியா, ஹரிகரன் (வயது 20) என இரண்டு பிள்ளைகள். ஹரிகரன் கூலி வேலைக்கு சென்று வந்தார். மேலும், மதுகுடித்து விட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று ஹரிகரன் தனது தாயார் லீலாவிடம் மது குடிக்க பணம் கேட்டார். அவர் பணம் இல்லை என கூறியதால் தாயாருடன் தகராறு செய்தார். இதையடுத்து லீலா இறச்சகுளம் பகுதியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றார்.

அப்போது வீட்டில் தனியாக இருந்த ஹரிகரன் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஹரிகரன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com