ஸ்ரீபெரும்புதூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி டிரைவர் சாவு

ஸ்ரீபெரும்புதூர் அருகே லாரியில் இருந்து தவறி விழுந்த டிரைவர் அதே லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி டிரைவர் சாவு
Published on

ஸ்ரீபெரும்புதூர்,

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கீழ்புத்தூர் கல்லுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மகன் மாணிக்கம் (வயது 45). இவர் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டு கோட்டை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார்.

நேற்று அதிகாலை இருங் காட்டு கோட்டையில் உள்ள நிறுவனத்தில் இருந்து பொருட்களை லாரியில் ஏற்றி கொண்டு மாணிக்கம் சுங்குவார்சத்திரம் நோக்கி சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பென்னலூரில் உள்ள சுங்கச்சாவடியை லாரி கடந்தபோது பக்க வாட்டில் லாரி உரசியது. டிரைவர் மாணிக்கம் லாரியின் கதவை திறந்து எட்டி பார்த்தபோது தவறி கீழே விழுந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் அதே லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணிக்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்க க ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com