

மும்பை,
மராட்டியத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மருந்து கடை உரிமையாளர்கள் இதனை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் அகில இந்திய மருந்து கடை சங்கம் வருகிற 28-ந் தேதி ஒரு நாள் கடை அடைப்பு போராட்டத்தில் குதிக்க போவதாக அறிவித்து உள்ளது.
இது தொடர்பாக மராட்டிய மாநில மருந்து கடை உரிமையாளர் சங்கத்தலைவர் ஹக்கும்ராஜ் மேத்தா தெரிவிக்கையில், டாக்டர்களின் பரிந்துரை ரசீது இல்லாமல் கருத்தடை உள்பட பல ஆபத்தை விளைவிக்கும் மருந்துகளை ஆன்லைனில் விற்பனை செய்து வருவதை கண்டித்து வருகிற 28-ந் தேதி ஒரு நாள் கடைகள் அடைப்பு மற்றும் அரசின் கவனத்தை ஈர்க்க ஆசாத் மைதானத்தில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.