கோவை கலெக்டர் அலுவலகத்தில், தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்ற வாலிபரால் பரபரப்பு

கோவை கலெக்டர் அலுவலகத்தில் தூக்கமாத்திரைகளை தின்று வாலிபர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை கலெக்டர் அலுவலகத்தில், தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்ற வாலிபரால் பரபரப்பு
Published on

கோவை,

கோவை காளப்பட்டியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 35). இவர் அந்த பகுதியில் இயற்கை பொருள் விற்பனையகம் நடத்தி வருகிறார். இவர் தனக்கு சொந்தமான வீட்டை சிலர் ஆக்கிரமிக்க முயற்சி செய்வதாக கோவை கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்திருந்தார். ஆனால் இந்த புகார் குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் மனவேதனையடைந்த கார்த்திகேயன் நேற்று காலை கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் மனு அளிக்க வந்தார். ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் அவர் கலெக்டரை சந்திக்க முடியவில்லை.

இதையடுத்து அவர் தான் மறைத்து வைத்திருந்த 10 தூக்க மாத்திரைகளை எடுத்து தின்றார். பின்னர் சிறிதுநேரத்தில் கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே மயங்கி கீழே விழுந்தார்.

இதைப்பார்த்த போலீசார் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் ஒருவர் தூக்கமாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com