மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

திண்டுக்கல் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் ஒருவர் பலியானார்.
மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் எம்.வி.எம். கல்லூரி அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் முத்துமாறன் (வயது 70). இவர் நேற்று முன்தினம் மாலை தாடிக்கொம்பு ரோட்டில் நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று முத்துமாறன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திண்டுக்கல் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com