குடவாசலில் லாரி மோதி முதியவர் பலி டிரைவருக்கு வலைவீச்சு

குடவாசலில் லாரி மோதி முதியவர் பலியானார். இதில் தொடர்புடைய டிரைவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
குடவாசலில் லாரி மோதி முதியவர் பலி டிரைவருக்கு வலைவீச்சு
Published on

குடவாசல்,

திருவாரூர் மாவட்டம், குடவாசல் கடத்தூர் அருகே வசந்த மாளிகை அடுக்கு குடியிருப்பை சேர்ந்தவர் வீரையன்(வயது94). இவர் சம்பவத்தன்று அதிகாலை கடைக்கு டீ குடிக்க நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கும்பகோணத்தில் இருந்து அதிவேகமாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக வீரையன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த குடவாசல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

டிரைவருக்கு வலைவீச்சு

இதுகுறித்து வீரையனின் மருமகள் பவானி கொடுத்த புகாரின் பேரில் குடவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் விபத்தை ஏற்படுத்திய லாரியையும், டிரைவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com