சாலை விபத்தில் மின்வாரிய ஊழியர் சாவு

விக்கிரவாண்டி அருகே சாலை விபத்தில் மின்வாரிய ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்
சாலை விபத்தில் மின்வாரிய ஊழியர் சாவு
Published on

விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி அருகே குத்தாம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 54). இவர் விக்கிரவாண்டி அருகே ஆசூரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக (போர்மேன்) பணியாற்றி வந்தார்.

இவர் சம்பவத்தன்று இரவு பணியை முடித்துவிட்டு அலுவலகத்தில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார். விக்கிரவாண்டி அருகே வந்தபோது திடீரென நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

இதில் படுகாயம் அடைந்த சுப்பிரமணியனை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இரவு சுப்பிரமணியன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com