மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஊழியரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க கோரி சாலை மறியல்

மின்சாரம் தாக்கி உயிரிழந்த மின்வாரிய ஊழியர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க கோரி அரூரில் அவருடைய உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஊழியரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க கோரி சாலை மறியல்
Published on

அரூர்,

தர்மபுரி மாவட்டம் கோட்டப்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கமல்ராஜ் (வயது 31). இவர் மின் வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். கமல்நாதன் நேற்று முன்தினம் கோட்டப்பட்டியில் மின் கம்பத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்ட போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதுகுறித்து கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் மின்சாரம் தாக்கி இறந்த கமல்நாதனின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற மின்வாரிய அதிகாரிகள் யாரும் வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவருடைய மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்கள் நேற்று அரூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் 4 ரோட்டில் அமர்ந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்மணி மற்றும் மின் வாரிய அதிகாரிகள், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உயிரிழந்த கமல்நாதனின் மனைவிக்கு மின்வாரியத்தில் வேலை வழங்க வேண்டும். அவருடைய குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com