ஏமானூர் வனப்பகுதியில் பெண் யானை சாவு

ஏமானூர் வனப்பகுதியில் உடல் நலக்குறைவால் பெண் யானை இறந்து கிடந்தது.
ஏமானூர் வனப்பகுதியில் பெண் யானை சாவு
Published on

ஏரியூர்,

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ளது ஏமனூர் வனப்பகுதி. இங்குள்ள பதனவாடி காப்புக்காட்டில் 10-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு உள்ளன. இந்த யானைகள் வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை மிதித்தும், தின்றும் அட்டகாசம் செய்து வந்தன. இந்த யானைகள் ஊருக்குள் புகாமல் இருக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஏமானூர் வனப்பகுதிக்குட்பட்ட பதனவாடி காப்புக்காட்டில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 35 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது. இதனை கண்டு ரோந்து சென்ற வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மாவட்ட வன அலுவலருக்கு வனத்துறையினர் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் மாவட்ட வன அதிகாரி ராஜ்குமார் உத்தரவின் பேரில் வனச்சரகர் குணசேகரன் மற்றும் வனத்துறை அலுவலர்கள் மற்றும் கால்நடை டாக்டர் பிரகாஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர் வனப்பகுதிக்கு சென்றனர். பின்னர் மருத்துவ குழுவினர் இறந்த யானையின் உடலை பிரேத பரிசோதனை நடத்தினர். அப்போது உடல் நலக்குறைவால் யானை இறந்தது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் குழிதோண்டி யானையை அடக்கம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com