அளவுக்கு அதிகமாக மதுகுடித்த தாய், மகன் சாவு

மச்சேரி அருகே அளவுக்கு அதிகமாக மதுகுடித்த தாய், மகன் உயிரிழந்தனர்.
அளவுக்கு அதிகமாக மதுகுடித்த தாய், மகன் சாவு
Published on

மேச்சேரி:-

மச்சேரி அருகே அளவுக்கு அதிகமாக மதுகுடித்த தாய், மகன் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

மது பழக்கம்

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள பொட்டனேரி ஆலமரத்து காடு பகுதியை சேர்ந்தவர் பவுனா (வயது 60). இவருடைய மகன் தேவன் (30). 2 பேரும் அலுமினிய பாத்திரம் வியாபாரம் செய்து வந்தனர்.

இந்த நிலையில் 2 பேருக்கும் மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. மேலும் தீராத மது பழக்கத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டு வந்தனர். டாக்டரிடம் அவர்கள் சிகிச்சைக்கு சென்றபோது தொடர்ந்து மது குடித்தால் நீங்கள் இருவரும் இறந்து விடுவீர்கள் என கூறியுள்ளார். எனினும் அவர்கள் தொடர்ந்து மது குடித்து வந்துள்ளனர்.

வீட்டுக்குள் பிணம்

இந்த நிலையில் நேற்று காலை பவுனா, தேவன் ஆகியோர் பிணமாக வீட்டுக்குள் கிடந்துள்ளனர். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் மேச்சேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ. இடத்திற்கு விரைந்து வந்து 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், பவுனா மற்றும் அவரது மகன் தேவன் ஆகியோர் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் இறந்து இருக்கலாம் என தெரிகிறது. எனினும் அவர்கள் மதுவில் விஷம் கலந்து குடித்தார்களா? என பிரேத பரிசோதனை முடிவில் தான் தெரியவரும் என்றனர். தொடர்ந்து மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com