

சென்னை தாம்பரத்தில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டம் காவனூர் பகுதியில் இயங்கும் தனியார் இரும்பு உருக்காலைக்கு திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகாவுக்கு உட்பட்ட திருவாலங்காடு வழியாக குளிர்சாதன வேன் சென்று கொண்டிருந்தது. அதில் 5 தொழிலாளர்கள் இருந்தனர். திருவாலங்காடு அடுத்த வியாசபுரம் பஞ்சாயத்து கூண்டரிகபுரம் என்ற இடத்தில் செல்லும்போது திடீரென வேன் தீப்பற்றி முழுவதுமாக எரிந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
வேனை ஓட்டி வந்த திருமூர்த்தி (வயது 29) வேனில் இருந்த 5 தொழிலாளர்களை இறக்கி அவர்களை காப்பாற்றினார். மேலும் சாலையில் ஓரமாக நிறுத்தியவுடன் முழுவதுமாக தீப்பற்றி எரிந்தது. இதனால் அந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.