அரசு நிர்ணயம் செய்ததை விட தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூல்

அரசு நிர்ணயம் செய்ததை விட தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூல்
அரசு நிர்ணயம் செய்ததை விட தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூல்
Published on

பொள்ளாச்சி

மாணவர்களின் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பினர் நேற்று பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு, பொள்ளாச்சி சப்-கலெக்டர் (பொறுப்பு) மகாராஜ் வழியாக ஒரு மனு அனுப்பினர். அதில் கூறியிருப்பதாவது:-

தனியார் பள்ளிகளில் கல்வி கட்டண முறைகேடு நடப்பதை தடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கட்டண நிர்ணய குழு அமைக்கப் பட்டு, கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.

2019-20-ம் கல்வி ஆண்டிற்கு குறைந்தபட்சம் எல்.கே.ஜி.க்கு ரூ.11,615-ம், அதிகபட்சமாக பிளஸ்-2-க்கு ரூ.25,850 வரையும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்த கட்டண பட்டியல் பள்ளிகளில் வைக்கப்படுவது இல்லை. கொரோனா காலத்தில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட 75 சதவீத கட்டணத்தை 2 தவணையாக கட்டலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் இதை யாரும் கடைபிடிப்பது இல்லை. எனவே அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை மட்டும் மாணவர்களிடம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com