கடத்தலை தடுக்க இந்திய கடலோர காவல்படை தீவிர கண்காணிப்பு

கடத்தலை தடுக்க மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இந்திய கடலோர காவல் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
கடத்தலை தடுக்க இந்திய கடலோர காவல்படை தீவிர கண்காணிப்பு
Published on

பனைக்குளம்,

ராமேசுவரத்திற்கு மிக அருகாமையில் உள்ளது இலங்கை கடல் பகுதி. ராமேசுவரம், தனுஷ்கோடி கடல் வழியாக படகு மூலமாக கடத்தல்காரர்கள் கடல் அட்டை,பீடிபண்டல்கள்,போதை மாத்திரைகள் மற்றும் போதைபொருட்களையும் இலங்கைக்கு கடத்தி செல்கின்றனர்.அதுபோல் இலங்கையில் இருந்து தங்க கட்டிகளும் அவ்வப்போது கடத்தி வரப்படுவதாக கூறப்படுகிறது.

அதேபோல் ராமேசுவரம் கடல் வழியாக நடைபெறும் கடத்தலை முழுமையாக தடுக்க இந்தியகடற்படையினரும், கடலோர காவல் படையினரும் மற்றும் கடலோர போலீசாரும் பாக்ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கப்பல் மற்றும் படகுகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதி சுந்தரமுடையான் முதல் வேதாளை,மண்டபம்,பாம்பன்,ராமேசுவரம்,தனுஷ்கோடி வரையிலான கடல் பகுதியில் இந்திய கடலோர காவல் படையினர் கடந்த சில நாட்களாக இரவு-பகலாக ஹோவர் கிராப்ட் கப்பலில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதுபோல் நடுக்கடலில் சந்தேகப்படும் படியான படகுகளோ புதிய நபர்கள் யாரும் வருகின்றனரா என்பது குறித்தும் தீவிரமாக கண்காணித்து வருவதுடன் மீன்பிடி படகுகளையும் சோதனை செய்து வருகின்றனர்.

ஹோவர் கிராப்ட் இந்திய கடலோரகாவல் படையினருடன் கடற்படை மற்றும் கடலோர போலீசாரும் இணைந்து தீவு பகுதிகளுக்கு சென்று சந்தேகப்படும் படியாக யாரேனும் நபர்கள் உள்ளனரா பொருட்கள் ஏதேனும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்தும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com