பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ் வினியோகத்தையொட்டி பள்ளிகளில் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பை பதிவு செய்யும் வசதி

பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ் வினியோகத்தையொட்டி பள்ளிகளில் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பை பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது.
பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ் வினியோகத்தையொட்டி பள்ளிகளில் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பை பதிவு செய்யும் வசதி
Published on

அரியலூர்,

பிளஸ்-2 மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதியினை தாங்கள் பயின்ற பள்ளிகளின் மூலமாக 2011-ம் ஆண்டு முதல் நேரடியாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இணையதளமான https://tnv-e-l-a-iv-a-a-i-ppu.gov.in -ல் பதிவு செய்து வேலை வாய்ப்பு அலுவலக அடையாள அட்டை பெற தமிழக அரசால் உரிய வழிவகை செய்யப்பட்டுள்ளது. தற்போது 2019-ம் ஆண்டிற்கான பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளின் மதிப்பெண் சான்றிதழ்கள் நாளை (திங்கட்கிழமை) வழங்கப்பட உள்ளது. மேலும் நாளை முதல் வருகிற 17-ந் தேதி வரை 15 நாட்களுக்கு ஒரே பதிவு மூப்பு தேதி வழங்கப்பட்டு அவர்கள் பயின்ற பள்ளியிலேயே இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவு பணி நடைபெற சிறப்பு நடவடிக்கைகளை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, பள்ளி கல்வித்துறை யுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறது. எனவே அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளிலும் இந்த வசதியினை பயன்படுத்தி மாணவர்கள் வேலைவாய்ப்பு பதிவுகளை மேற்கொள்ளலாம். மேலும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு துறையின் இணையதளத்தில் https://tnv-e-l-a-iv-a-a-i-ppu.gov.in தங்கள் பள்ளி அளவிலேயே ஆன்லைனில் பதிவு செய்யலாம்.

வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்

எனவே மாணவர்கள் பிளஸ்-2 கல்வித் தகுதியை பதிவு செய்ய மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளன்று தங்களது எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு கல்வித் தகுதியினை பதிவு செய்த முந்தைய வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி, சாதி சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, கடவுச்சீட்டு ஆகிய விவரங்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளிகளை அணுகி பதிவுகளை மேற்கொள்ளலாம். 2019-ம் ஆண்டு பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ- மாணவிகளும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) பொற்கொடி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com