இருதரப்பினர் மோதல்; 5 பேர் மீது வழக்கு

ராயக்கோட்டை அருகே மோதலில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இருதரப்பினர் மோதல்; 5 பேர் மீது வழக்கு
Published on

ராயக்கோட்டை:

ராயக்கோட்டையை அடுத்த கள்ளுகான்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 26). இவருடைய மாமனார் மாதப்பன் அந்த பகுதியில் மீன் வருவல் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இந்த கடைக்கு சேட்டு, இவருடைய தந்தை பெருமாள் வந்தனர். அவர்கள் மீன் சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து இருதரப்பினரும் ராயக்கோட்டை போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சேட்டு, பெருமாள், மாதப்பன், செல்வராஜ், முனிராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com