மதுரவாயலில் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்து வடமாநில வாலிபர் சாவு

2-வது மாடியில் கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்த வாலிபர் எதிர்பாராதவிதமாக கால் தவறி கீழே விழுந்தார்.
மதுரவாயலில் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்து வடமாநில வாலிபர் சாவு
Published on

பூந்தமல்லி,

மதுரவாயலை அடுத்த செட்டியார் அகரம், எஸ்.கே.நகரில் பாலச்சந்தர்(வயது 55), என்பவருக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்கள் தங்கி கட்டுமானப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு வீட்டின் 2-வது மாடியில் மேற்கு வங்கத்தை சேர்ந்த ரபிகுல் இஸ்லாம் (23), என்பவர் கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி அவர் 2-வது மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்து போன ரபிகுல் இஸ்லாம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com