குடும்ப தகராறில் மனைவி தாய் வீட்டுக்கு சென்றதால் வாலிபர் தற்கொலை

குடும்ப தகராறு காரணமாக மனைவி தாய் வீட்டுக்கு சென்றதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குடும்ப தகராறில் மனைவி தாய் வீட்டுக்கு சென்றதால் வாலிபர் தற்கொலை
Published on

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் மண்ணிவாக்கம் அய்யப்பன் கோவில் தெரு, சாமி விவேகானந்தர் நகர் பகுதியை சேர்ந்தவர் மைக்கேல்ராஜ் (வயது 26), குடும்ப தகராறு காரணமாக இவரது மனைவி தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

இதனால் மனம் உடைந்த மைக்கேல்ராஜ் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மைக்கேல்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com