குடும்ப பிரச்சினையால் விரக்தி: புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை

திருவையாறை, குடும்ப பிரச்சினையால் விரக்தி: புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
குடும்ப பிரச்சினையால் விரக்தி: புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை
Published on

திருவையாறு.

திருவையாறை அடுத்த மேலஉத்தமநல்லூரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது32). இவருக்கும், பிரியதர்ஷினி(20) என்பவருக்கும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தி அடைந்த பாலகிருஷ்ணன் நேற்று வீட்டில் பூச்சி மருந்தை(விஷம்) குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த திருவையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஞானமுருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த பாலகிருஷ்ணன் உடலை கைப்பற்றி திருவையாறு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பிரியதர்ஷினி கொடுத்த புகாரின்பேரில் திருவையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com