மின்சாரம் தாக்கி விவசாயி பலி

விளாத்திகுளம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாபமாக பலியானார்
மின்சாரம் தாக்கி விவசாயி பலி
Published on

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாபமாக பலியானார்.

விவசாயி

விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் வடக்கு தெருவை சேர்ந்த சுடலைமாடன் மகன் பச்சைவேல் (வயது 55). விவசாயி. இவர் குளத்தூர் வடக்குத் தெருவில் புதிதாக வீடு கட்டி வந்தார். புதிய கட்டிடத்திற்கு தினமும் காலையில் தண்ணீர் அடித்து வந்துள்ளார்.

வழக்கம் போல் நேற்று காலையில் வீட்டின் கட்டிடத்திற்கு தண்ணீர் அடிப்பதற்காக மோட்டார் போடுவதற்கு சென்றுள்ளார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக தரையில் கிடந்த மோட்டாரின் மின்சார ஒயர்களை மிதித்து விட்டாராம். இதில் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு உடனடியாக குளத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த குளத்தூர் போலீசார் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று அவரது உடலைக் கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து குளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவரது உடலை பார்த்து குடும்பத்தினரும், உறவினர்களும் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. புதிய வீடு கட்டி வந்தநிலையில் மின்சாரம் தாக்கி அவர் பலியான சம்பவம் அக்கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com