

கோவை
காதலித்தவரை திருமணம் செய்ய முடியாததால் அழகுநிலையம் நடத்தி வந்த பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பெண் என்ஜினீயர்
கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவருடைய மகள் அனுசுயா (வயது 24). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர், வரதராஜபுரம் காமராஜர் ரோட்டில் அழகு நிலையம் நடத்தி வந்தார்.
இவர் கல்லூரியில் படிக்கும்போது, அதே கல்லூரியில் படித்த நாகர் கோவிலை சேர்ந்த சக மாணவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடை வில் அது காதலாக மாறியது. இதனால் படித்து முடித்த பின்னரும் இருவரும் காதலை தொடர்ந்தனர்.
வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம்
இந்த காதல் விவகாரம் அனுசுயாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அனுசியாவுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்ததுடன், திருமணம் நிச்சயதார்த்த மும் செய்தனர்.
தான் உயிருக்கு உயிராக காதலித்தவரை திருமணம் செய்ய முடிய வில்லையே என்ற ஏக்கத்தில் அனுசுயா வாழ்க்கையில் விரக்தி அடைந் தார். இந்த நிலையில் அழகு நிலையத்துக்கு செல்வதாக கூறிச்சென்ற அனுசுயா நீண்டநேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை.
தூக்குப்போட்டு தற்கொலை
இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அழகுநிலையத்துக்கு சென்று பார்த்தனர். அங்கு அனுசுயா தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்து கதறி துடித்தனர். இதுகுறித்து சிங்கா நல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அனுசுயாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.