குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து 5-வது நாளாக போராட்டம்

மக்கள் ஜனநாயக பேரவையினர் மற்றும் முஸ்லிம்கள் நேற்று 5-வது நாளாக தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து 5-வது நாளாக போராட்டம்
Published on

பெரம்பலூர்,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரியும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றை அமல்படுத்தக்கூடாது என்றும் பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு சந்தை திடலில், லெப்பைக்குடிக்காடு மக்கள் ஜனநாயக பேரவையினர் மற்றும் முஸ்லிம்கள் நேற்று 5-வது நாளாக தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்றைய போராட்டத்தின் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்து பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com