கோவையில்: பன்றிக்காய்ச்சலுக்கு 3 பேர் பலி

கோவையில் பன்றிக்காய்ச்சலுக்கு பெண்கள் உள்பட 3 பேர் பலியானார்கள்.
கோவையில்: பன்றிக்காய்ச்சலுக்கு 3 பேர் பலி
Published on

கோவை,

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் கந்தசாமி. இவர் கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். பின்னர் சிகிச்சைக்காக கடந்த மாதம் 24-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பதை அறிந்தனர். இதையடுத்து அவரை சிறப்பு வார்டில் வைத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலை இறந்தார்.

கோவை சூலூர் அப்பநாயக்கம்பட்டியை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது50). பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர், கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் மேல்சிகிச்சைக்காக கடந்த 9-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார். கோவை புலியகுளம் ரெட்பீல்டு பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி சுகந்தி (45). இவர் கடுமையான காய்ச்சல் காரணமாக கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கு அவருக்கு பரிசோதனை மேற்கொண்ட டாக்டர்கள் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பதை உறுதி செய்தனர். பின்னர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இறந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com