பழனி பஸ்நிலையம் அருகே ஓட்டலில் தீ விபத்து

பழனி பஸ்நிலையம் அருகே உள்ள ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்டது.
பழனி பஸ்நிலையம் அருகே ஓட்டலில் தீ விபத்து
Published on

பழனி,

பழனி அடிவாரம் சாலையில் தனியாருக்கு சொந்தமான ஓட்டல் ஒன்று உள்ளது. 4 மாடி கொண்ட இந்த ஓட்டலில் நேற்று அங்குள்ள ஊழியர்கள் வழக்கம்போல் சமையல் செய்து கொண்டிருந்தனர். மதியம் 12 அளவில் தரைத்தளத்தில் சமையலறையில் உள்ள எண்ணெய் சட்டியில் திடீரென தீப்பிடித்தது. பின்னர் தீ அறை முழுவதும் பரவியது. இதனால் அங்கு பெரும் புகைமூட்டம் ஏற்பட்டது. இதைக்கண்ட ஊழியர்கள் மற்றும் அங்கு உணவருந்தியவர்கள் அலறியடித்தபடி வெளியே ஓடி வந்தனர்.

பின்னர் தீ விபத்து குறித்து ஓட்டல் நிர்வாகம் சார்பில் பழனி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் கமலக்கண்ணன் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து ஓட்டலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

தீயணைப்பு படையினர் விரைந்து வந்ததால் தீ மற்ற பகுதிகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது. எனினும் இந்த விபத்தில் சமையலறையில் இருந்த காய்கறிகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமாயின. இதற்கிடையே தகவல் அறிந்த பழனி டவுன் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் தீ விபத்து குறித்து அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து ஏற்பட்ட ஓட்டல் பஸ்நிலையம் அருகில் இருப்பதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com