நிவாரண முகாமில் தங்கியுள்ள மக்களுக்கு பிஸ்கட் பாக்கெட்டுகளை வீசியதால் சர்ச்சை பா.ஜனதா கண்டனம்

நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு மந்திரி எச்.டி.ரேவண்ணா, பிஸ்கட் பாக்கெட்டுகளை வீசியதால் சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு பா.ஜனதா கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நிவாரண முகாமில் தங்கியுள்ள மக்களுக்கு பிஸ்கட் பாக்கெட்டுகளை வீசியதால் சர்ச்சை பா.ஜனதா கண்டனம்
Published on

பெங்களூரு,

குடகு, தட்சிண கன்னடா, ஹாசன் உள்பட பல்வேறு மாவட்டங்களில் அதிக மழை பெய்து பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் ஹாசன் மாவட்டம் அரக்கல்கோடு தாலுகா ராமநாதபுராவில் மக்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பொதுப்பணித்துறை மந்திரி எச்.டி.ரேவண்ணா பிஸ்கட் பாக்கெட்டுகளை வழங்கினார்.அப்போது அந்த மக்களுக்கு பிஸ்கட் பாக்கெட்டுகளை கையில் கொடுக்காமல், அவர் தூக்கி வீசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தரப்பினரும் மந்திரி எச்.டி.ரேவண்ணாவை கண்டித்துள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்து கர்நாடக பா.ஜனதா பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்.எல்.சி. நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறி இருப்பதாவது:-

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com