

ஊத்துக்கோட்டை,
அதில் ஒரு அங்கமாக ஊத்துக்கோட்டையில் உள்ள அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியை பாத்திமா தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிமனோகரன், சிட்டிபாபு, சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் சுப்பிரமணி வரவேற்றார். துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 3 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார். பெற்றோர்கள் ஆசிரியர் கழக தலைவர் சீனிவாசன், உதவி தலைமை ஆசிரியர் சுதாகர், வக்கீல்கள் வேல்முருகன், தில்லைகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.