திருப்பதி ஏழுமலையான் கோவில் சார்பில் காஞ்சீபுரம் அத்திவரதருக்கு பட்டு வஸ்திரம்

காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றனர். அங்கு திருப்பதி ஏழுமலையான் கோவில் சார்பாக பட்டு வஸ்திரத்தை சமர்ப்பித்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவில் சார்பில் காஞ்சீபுரம் அத்திவரதருக்கு பட்டு வஸ்திரம்
Published on

திருமலை,

திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், சிறப்பு அதிகாரி தர்மாரெட்டி ஆகியோர் நேற்று காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றனர். அங்கு திருப்பதி ஏழுமலையான் கோவில் சார்பாக பட்டு வஸ்திரத்தை சமர்ப்பித்தனர். முன்னதாக கோவிலுக்கு வருகை தந்த அவர்களை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா, கோவில் அதிகாரி தியாகராஜர் உள்பட அதிகாரிகள் வரவேற்றனர். அதைத்தொடர்ந்து அவர்கள் அத்திவரதரை தரிசனம் செய்தனர்.

இதேபோல திருத்தணி முருகன் கோவிலுக்கு சென்ற அனில்குமார் சிங்கால் மற்றும் தர்மாரெட்டி ஆகியோர் ஏழுமலையான் கோவில் சார்பில் பட்டு வஸ்திரத்தை வழங்கினர்.

அவர்களை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், அறங்காவலர் குழு தலைவர் ஜெயசங்கர் உள்பட கோவில் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் அவர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

கடந்த 2006-ம் ஆண்டு முதல் ஆடி கிருத்திகையையொட்டி திருத்தணி முருகன் கோவிலுக்கு ஏழுமலையான் கோவில் சார்பில் பட்டு வஸ்திரம் வழங்கப்பட்டு வருவதாக தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com