முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு: சிங்கம்புணரியில் மவுன ஊர்வலம்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி சிங்கம்புணரியில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. இதையொட்டி நகரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு: சிங்கம்புணரியில் மவுன ஊர்வலம்
Published on

சிங்கம்புணரி,

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் மரணமடைந்தார். அவரது மறைவையொட்டி சிங்கம்புணரியில் அனைத்து கட்சியினர்கள் மற்றும் வர்த்தக சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தும் விதமாக சிங்கம்புணரி புசலியம்மாள் மருத்துவமனை முன்பு இருந்து 500-க்கும் மேற்பட்டவர்கள் மவுன ஊர்வலமாக வந்து சிங்கம்புணரி அண்ணாசிலை முன்பு வைக்கப்பட்டிருந்த வாஜ்பாய் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

இதையொட்டி சிங்கம்புணரி பகுதியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. மவுன ஊர்வலத்தில் பாரதீய ஜனதா கட்சி மாவட்ட துணைத் தலைவர் செந்தில் குமார், நகர தலைவர் வசிகரன், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ ராம, அருணகிரி, மாநில இலக்கிய அணி துணைத் தலைவர் சிங்கை தருமன், காங்கிரஸ் நகர தலைவர் பழனிவேல்ராஜன் மற்றும் தி.மு.க சார்பில் நகரச் செயலாளர் யாகூப், பொதுக்குழு உறுப்பினர்கள் சோமசுந்தரம், அம்பலமுத்து, அ.தி.மு.க சார்பில் முன்னாள் கவுன்சிலர் குணசேகரன் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பொன்பகீரதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com