ஆந்திராவில் இருந்து பெங்களூருவுக்கு காரில், செம்மரக்கட்டைகள் கடத்தல்

ஆந்திராவில் இருந்து பெங்களூருவுக்கு காரில், செம்மரக்கட்டைகள் கடத்தி வந்ததாக தமிழகத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திராவில் இருந்து பெங்களூருவுக்கு காரில், செம்மரக்கட்டைகள் கடத்தல்
Published on

பெங்களூரு,

872 கிலோ எடை கொண்ட செம்மரக்கட்டைகள் அவர்களிடம் இருந்த பறிமுதல் செய்யப்பட்டன.

பெங்களூரு காஜிசொன்னேனஹள்ளி கேட் அருகே காடுகோடி போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த காரை வழிமறித்து போலீசார் சோதனையிட்டனர். இந்த சோதனையின்போது காரின் உள்ளே செம்மரக்கட்டைகள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து காரில் இருந்த 3 பேரை பிடித்து போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின்போது அவர்கள் தமிழ்நாடு சேலத்தை சேர்ந்தவர்களான மது பொன்னுசாமி(வயது 37), பழனி(40) மற்றும் தர்மபுரியை சேர்ந்த பழனி முருகன்(25) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இவர்கள் ஆந்திர மாநிலம் கடப்பா வனப்பகுதியில் இருந்து செம்மரக்கட்டைகளை காரில் பெங்களூருவுக்கு கடத்தி வந்ததும், ராமு என்பவரின் அறிவுரைப்படி அவர்கள் செயல்பட்டதும் தெரியவந்தது. கைதானவர்களிடம் இருந்து 872 கிலோ எடை கொண்ட செம்மரக்கட்டைகள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து காடுகோடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கடத்தலில் தொடர்பு கொண்டு தலைமறைவாக உள்ள ராமு உள்பட மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com