புனே, ஐதராபாத்தில் இருந்து ஒரே நாளில் 6 லட்சத்து 93 ஆயிரம் தடுப்பூசிகள் சென்னை வந்தன

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
புனே, ஐதராபாத்தில் இருந்து ஒரே நாளில் 6 லட்சத்து 93 ஆயிரம் தடுப்பூசிகள் சென்னை வந்தன
Published on

ஆலந்தூர்,

கொரோனா தடுப்பூசி போட பொதுமக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து இருப்பதால் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படுகிறது. எனவே மக்கள் தொகையின் அடிப்படையில் தமிழகத்துக்கு சிறப்பு ஒதுக்கீடாக 1 கோடி தடுப்பூசி வழங்கும்படி பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

இதுவரை மத்திய தொகுப்பில் இருந்தும், தமிழக அரசின் நேரடி கொள்முதல் மூலமாகவும் தமிழகத்துக்கு 1 கோடியே 71 லட்சத்து 40 ஆயிரத்து 850 தடுப்பூசிகள் வந்து உள்ளன.

இந்தநிலையில் புனேவில் இருந்து விமானத்தில் 51 பெட்டிகளில் 6 லட்சத்து ஆயிரத்து 630 கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தன. அதேபோல் ஐதராபாத்தில் இருந்து 91 ஆயிரத்து 580 கோவேக்சின் தடுப்பூசிகள் வந்தன.

புனே, ஐதராபாத்தில் இருந்து ஒரே நாளில் சென்னைக்கு வந்த 6 லட்சத்து 93 ஆயிரத்து 210 தடுப்பூசிகள் தேனாம்பேட்டையில் உள்ள மாநில சுகாதார கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் ஆகியோர் ஆய்வு செய்து, தடுப்பூசிகளை மாட்டங்களுக்கு பிரித்தனுப்பும் பணியை துரிதப்படுத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com