கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் வரத்து அதிகரிப்பு

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர் பூண்டி ஏரிக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது நீர் வரத்து அதிகரித்துள்ளது.
கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் வரத்து அதிகரிப்பு
Published on

ஊத்துக்கோட்டை,

கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து கடந்த 25-ந் தேதி பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் 28ந் தேதி தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டிற்கும், 29ந் தேதி பூண்டி ஏரிக்கும் வந்தடைந்தது.

கண்டலேறு அணையிலிருந்து முதலில் 500 கனஅடி நீர் திறக்கப்பட்டு, அதன் பின்னர் படிப்படியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு, தற்போது வினாடிக்கு 1,250 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.

இந்த நீர் இத்தனை நாட்களாக சராசரியாக வினாடிக்கு 250 கனஅடி வீதம் பூண்டி ஏரிக்கு வந்து சேர்ந்தது.

இந்த நிலையில் நேற்று காலை நீர் வரத்து வினாடிக்கு 320 கன அடியாக அதிகரித்தது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும். இதில் 3,231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 21.17 அடியாக பதிவானது. 365 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

பூண்டி ஏரியிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 300 கனஅடி நீரும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு 10 கன அடி வீதம் தண்ணீரும் திறக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com