கள்ளக்காதலி வேறு ஒருவருடன் பேசியதால் விரக்தி - டிரைவர் தீக்குளித்து தற்கொலை

கள்ளக்காதலி வேறு ஒருவருடன் பேசியதால் டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
கள்ளக்காதலி வேறு ஒருவருடன் பேசியதால் விரக்தி - டிரைவர் தீக்குளித்து தற்கொலை
Published on

திரு.வி.க.நகர்,

சென்னை அயப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 28). கார் டிரைவரான இவர், நேற்று முன்தினம் திருமங்கலம் பகுதியில் திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். உடனே அருகில் இருந்த பொதுமக்கள், சுரேசை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

விசாரணையில் சுரேசுக்கும், திருமணம் ஆகி கணவரை இழந்த 43 வயது பெண்ணுக்கும் கள்ளக்காதல் இருந்ததாகவும், தனது கள்ளக்காதலி வேறு ஒருவருடன் பேசியதால் விரக்தி அடைந்த சுரேஷ், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com