மது குடிக்க பணம் தராததால் ஆத்திரம், தந்தையை கட்டையால் அடித்து கொலை செய்த வாலிபர் கைது

மது குடிக்க பணம் தராததால் தந்தையை கட்டையால் அடித்து கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மது குடிக்க பணம் தராததால் ஆத்திரம், தந்தையை கட்டையால் அடித்து கொலை செய்த வாலிபர் கைது
Published on

சரவணம்பட்டி,

கோவை சரவணம்பட்டி முருகன் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 65). இவருடைய மகன் குமரவேல் (31). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாக வில்லை. இவர் மது குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் அவா வேலைக்கு சரியாக செல்லாமல் இருந்து வந்துள்ளார்.

குடிப்பழக்கத்தை கைவிட்டு, வேலைக்கு செல்லுமாறு குமரவேலிடம், கிருஷ்ணன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்தநிலையில் கடந்த 3-ந் தேதி குமரவேல் தனது தந்தை கிருஷ்ணனிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். ஆனால் கிருஷ்ணன் பணம் தர மறுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த குமரவேல் அங்கு கிடந்த விறகு கட்டையால் கிருஷ்ணனின் ஓங்கி அடித்து விட்டு தப்பி சென்றார்.

இதில் நிலைகுலைந்து போன கிருஷ்ணன் ரத்த வௌளத்தில் கீழே சரிந்து விழுந்தார். உயிருக்கு ஆபத்தானநிலையில் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஆனாலும் அவா சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து குமரவேலை கைது செய்தனா. மது குடிக்க பணம் தராத ஆத்திரத்தில் மகனே தந்தையை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com