

காரைக்கால்,
இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் கந்தசுவாமி தலைமை தாங்கினார். தேர்தல் கல்விக்குழுவை திருநள்ளாறு தாசில்தார் முத்து தொடங்கி வைத்தார். மாணவர்கள் வாக்குச்சாவடி அல்லது தாலுகா அலுவலகத்திற்குச் சென்று எவ்வாறு வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்க்க விண்ணப்பிப்பது என்று விளக்கி கூறினார். மேலும் www.nvsp.in என்ற இணையதளம் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க எவ்வாறு விண்ணப்பிக்கலாம் என்பதையும் விளக்கினார். வேளாண் கல்லூரி பேராசிரியரும், மாநில தேர்தல் கல்விக்குழு பயிற்சியாளருமான மோகன் வாக்குப்பதிவின் முக்கியத்துவம், வாக்காளர் இணையதள பதிவுமுறை உள்ளிட்ட செய்முறை பயிற்சி அளித்து மாணவ, மாணவிகளின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தார்.