கிராம பஞ்சாயத்து கணக்காளர் தூக்குப்போட்டு தற்கொலை

பேளூருவில் உடல்நலக்குறைவால் மனமுடைந்து கிராம பஞ்சாயத்து கணக்காளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதமும் சிக்கியது.
கிராம பஞ்சாயத்து கணக்காளர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

ஹாசன்: பேளூருவில் உடல்நலக்குறைவால் மனமுடைந்து கிராம பஞ்சாயத்து கணக்காளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதமும் சிக்கியது.

கிராம பஞ்சாயத்து கணக்காளர்

ஹாசன் மாவட்டம் பேளூர் தாலுகா பைராபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் பசவராஜூ(வயது 45). இவர், ஆரேஹள்ளி கிராம பஞ்சாயத்தில் கணக்காளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக பசவராஜூ தீவிர காய்ச்சல் இருமலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வீட்டிற்கு வந்தும் பசவராஜூக்கு காய்ச்சல் இருமல் போகவில்லை. இதனால் பசவராஜூ மன உடைந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பசவராஜூ மனைவியுடன் சாப்பிட்டு விட்டு தூங்க செல்வதாக தனிஅறைக்கு சென்றுள்ளார். ஆனால் அவர், அந்த அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை நேற்று காலை பார்த்து அதிர்ச்சி அடைந்த மனைவி, பேளூர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட பசவராஜூவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கடிதம் சிக்கியது

அப்போது பசவராஜூவின் சட்டைப்பையில் இருந்து கடிதம் ஒன்று கிடந்தது. அந்த கடிதம் பசவராஜூ, தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கைப்பட எழுதியது தெரியவந்தது. அந்த கடிதத்தில் பசவராஜூ கூறியிருந்ததாவது:-

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக காய்ச்சல், இருமலால் நான் அவதிப்பட்டு வந்தேன். சிகிச்சை பெற்றும் குணம் அடையவில்லை. இதனால் மனஉடைந்து தற்கொலை செய்து கொள்கிறேன். என் தற்கொலைக்கு வேறு யாரும் காரணம் இல்லை

இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com