மாங்காட்டில் குடும்ப தகராறில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை

காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு அருகே குடும்ப தகராறில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்துக் கொண்டார்.
மாங்காட்டில் குடும்ப தகராறில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை
Published on

குடும்ப தகராறு

காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த சின்ன கொளுத்துவான்சேரி, ஈ.வி.பி.பிரபு அவென்யூ பகுதியை சேர்ந்தவர் கிரிஜா (வயது 61). இவர் தனது மகன், மருமகளுடன் வசித்து வந்தார். இவருக்கும் மருமகளுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று மீண்டும் வழக்கம் போல் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் மனமுடைந்த கிரிஜா வீட்டில் இருந்த மண் எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார்.கிரிஜாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் அவர் தீயில் கருகி பரிதாபமாக இறந்து போனார்.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து அறிந்த மாங்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இறந்து போன கிரிஜாவின் உடலை கைப்பற்றி போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com