கடலூரில் வருகிற 7-ந்தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கடலூரில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் வருகிற 7-ந்தேதி நடக்கிறது.
கடலூரில் வருகிற 7-ந்தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்
Published on

கடலூ.

கடலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 7-ந் தேதி கடலூர் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

இம்முகாமில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, கலை மற்றும் அறிவியல், நர்சிங், வணிகப் பட்டதாரிகள், ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு படித்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இந்த வேலைவாய்ப்பு முகாம் மூலமாக தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறும் பயனாளிகளின் வேலைவாய்ப்பக பதிவு விவரங்கள் ரத்து செய்யப்பட மாட்டாது. எனவே இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள இளைஞர்கள் மற்றும் வேலைநாடுநர்கள் தமிழ்நாடு தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளமானwww.tnprivatejobs.tn.gov.in-ல் பதிவு செய்து கலந்து கொள்ளலாம். மேலும் அனைவரும் தங்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுயவிவர குறிப்புடன் முகாமில் நேரடியாக கலந்து கொள்ளலாம்.

இதுதொடர்பான கூடுதல் விவரங்களை கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 04142-290039 என்ற தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

மேற்கண்ட தகவலை கடலூ கலெக்டா சந்திரசேகா சாகமூ தெவித்துள்ளா.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com