கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள கிராமப்புறங்களில் சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும்: முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே

மராட்டியத்தில் மக்களை வாட்டிவதைத்து வரும் கொரோனா 2-வது அலையின் தாக்கம் குறைந்து வருகிறது.
கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள கிராமப்புறங்களில் சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும்: முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே
Published on

இது ஒருபக்கம் நிம்மதியை அளித்தாலும், கொரோனா 3-வது அலை ஏற்படும் என நிபுணர்கள் கூறி வருகின்றனர். எனவே 3-வது அலையை எதிர்கொள்ள மராட்டிய அரசு தயாராகி வருகிறது.

இந்தநிலையில் சிந்துதுர்க் மாவட்டம் குடால் பகுதியில் ஆக்சிஜன் ஆலையை காணொலி காட்சி மூலம் திறந்துவைத்த பின்னர் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறியதாவது:-

கொரோனா 3-வது அலையை சமாளிக்க கிராமப்புறங்களில் சுகாதார வசதிகளை மேம்படுத்தப்பட வேண்டும். எனவே கொரோனா 3-வது அலையை திறம்பட கையாள கூடிய வகையில் மாவட்ட நிர்வாகங்கள் திட்டங்களை முன்கூட்டியே வகுக்க வேண்டும். எந்த மாவட்டத்திலும் ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்கக்கூடாது. மாவட்டங்களில் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்த அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com