தூத்துக்குடியில் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திய சாரல் மழை

தூத்துக்குடியில் நேற்று காலையில் பெய்த சாரல் மழை, மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.
தூத்துக்குடியில் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திய சாரல் மழை
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் கடந்த வாரம் பெய்த தொடர் மழையால் பல்வேறு பகுதிகளில் மழைவெள்ளம் வீடுகளை சூழ்ந்து கிடக்கிறது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.

இந்த நிலையில் மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி பல்வேறு இடங்களில் மோட்டார்கள் வைத்தும், டேங்கர் லாரிகள் மூலமும் மழைநீரை உறிஞ்சி அப்புறப்படுத்தி வருகின்றனர். அதே நேரத்தில் வெயிலின் தாக்கமும் கடந்த 4 நாட்களாக அதிகமாக இருந்தது. இதனால் மழைநீர் வேகமாக வடிந்து வருகிறது. முத்தம்மாள் காலனி, அய்யப்பன்நகர், தனசேகரன் நகர் பகுதியில் தொடர்ந்து மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் மக்கள் கடும் பாதிப்பு அடைந்து உள்ளனர்.

சாரல் மழை

இனிமேல் மழை வர வாய்ப்பு இல்லை என்று மக்கள் எண்ணி இருந்த நிலையில், நேற்று காலையில் திடீரென மேக கூட்டங்கள் திரண்டன. 9.30 மணி அளவில் சாரல் மழை பெய்ய தொடங்கியது.

தற்போதுதான் வெள்ளநீர் வடியத் தொடங்கி உள்ளது. இந்த நேரத்தில் மீண்டும் மழை பெய்ததால் தூத்துக்குடி மக்கள் கடும் அச்சத்தில் ஆழ்ந்தனர். ஆனால் இந்த மழை சிறிது நேரத்தில் நின்று விட்டது. அதன்பிறகு வழக்கம் போல் வெயில் அடிக்க தொடங்கியது. அதன் பின் னரே மக்கள் நிம்மதி அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com