தூத்துக்குடியில் மீன் வாங்க வருபவர்களுக்கு கடும் கட்டுப்பாடு - கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை

தூத்துக்குடியில் கொரோனா பரவாமல் தடுக்க மீன் வாங்க வருபவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
தூத்துக்குடியில் மீன் வாங்க வருபவர்களுக்கு கடும் கட்டுப்பாடு - கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மீன்பிடி தொழிலுக்கு சில நிபந்தனைகளுடன் ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

அதன்படி மீனவர்கள் சுழற்சி முறையில் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். தூத்துக்குடி புதிய துறைமுகம் கடற்கரை பகுதி மீனவர்கள் நேற்று வழக்கம் போல் மீன்பிடிக்க சென்றனர். ஆனால் அவர்களுக்கு போதிய மீன்கள் கிடைக்கவில்லை.

அதே நேரத்தில் அந்த பகுதியில் மீன் வாங்க செல்பவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று காலையில் புதிய துறைமுகம் கடற்கரைக்கு சென்றனர். அங்கு மீன் ஏலமிடும் பகுதியில் பெரிய வட்டம் வரைந்தனர். தொடர்ந்து அதனை சுற்றி சிறிய வட்டங்களை வரைந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகளை விதித்தனர். மேலும் அதை முறையாக கடைபிடிக்கும்படி அறிவுறுத்தினர்.

இதற்கிடையே, தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com