

குன்றத்தூர் மற்றும் சென்னையை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்வதற்காக இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் அதிக அளவில் வந்த வண்ணம் இருந்தனர்.
கோவிலுக்கு உள்ளே செல்ல நுழைவுவாயிலில் பக்தர்கள் கூட்டமாக உள்ளே அனுமதிக்கப்பட்டு நெருக்கமாக வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டார்கள். குன்றத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து கோவிலுக்கு செல்லும் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் பக்தர்கள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய முடியாமல் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் இதனை சரி செய்ய போலீசார் அதிக அளவில் பணியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.