மதுக்கடைகளை மூடக்கோரி இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மதுக்கடைகளை மூடக்கோரி இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மதுக்கடைகளை மூடக்கோரி இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Published on

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி பள்ளிவாசல் பஜாரில் திருச்செந்தூர் ஒன்றிய இந்து மக்கள் கட்சியின் சார்பாக தமிழகத்தில் மதுக்கடைகளை நிரந்தரமாக மூடக்கோரியும் மது இல்லாத தமிழகமாக மாற்றக் கோரியும் தமிழக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட இந்து மக்கள் கட்சி இளைஞர் அணி தலைவர் சு.பாலன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் வி பி சக்திவேல், திருச்செந்தூர் ஒன்றிய தலைவர் சேனா தங்கராஜ், பள்ளத்தூர் பாலன், காயாமொழி செல்வகுமார், ஆறுமுகநேரி சிவனேசன், திருச்செந்தூர் ஒன்றிய அமைப்பாளர் பாலச்சந்திரன், திருச்செந்தூர் ஒன்றிய அமைப்பு செயலாளர் பால்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com