அறந்தாங்கி அருகே குதிரை, மாட்டு வண்டி பந்தயம்

அறந்தாங்கி அருகே குதிரை, மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
அறந்தாங்கி அருகே குதிரை, மாட்டு வண்டி பந்தயம்
Published on

அறந்தாங்கி,

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே இடையார் அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு 40-ம் ஆண்டு குதிரை, மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது. பந்தயத்தில் திருச்சி, தஞ்சை, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து குதிரை, மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. 6 பிரிவுகளாக 2 நாட்களாக நடைபெற்ற பந்தயத்தில் பெரிய மாட்டு வண்டி பிரிவில் 7 ஜோடிகளும், நடுமாட்டு வண்டி பிரிவில் 15 ஜோடிகளும், கரிச்சான் மாட்டு வண்டி பிரிவில் 16 மாடுகளும், பூஞ்சிட்டு பிரிவில் 17 மாட்டு வண்டிகளும், தேன்சிட்டு பிரிவில் 18 மாட்டு வண்டிகளும், குதிரை வண்டி பிரிவில் 10 குதிரை வண்டிகளும் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன.

இடையார் அய்யனார் கோவிலில் இருந்து கம்மங்காடு வரையில் பந்தய எல்லையாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. பந்தயத்தில் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களை பிடித்த குதிரை மற்றும் மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு ரொக்க பணம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் குதிரை, மாட்டு வண்டிகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடிப் பரிசு, சிறப்பு பரிசு மற்றும் கேடயங்கள் கொடுத்து கவுரவிக்கப்பட்டது. மேலும் பந்தயத்தில் கலந்து கொண்ட அனைத்து குதிரை, மாட்டு வண்டிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. பந்தயத்தை ஏராளமான ரசிகர்கள், பொதுமக்கள் சாலையின் இருபுறமும் திரண்டிருந்து கண்டு ரசித்தனர். இதற்கான ஏற் பாடுகளை இடையார் பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் அறந்தாங்கி போலீசார் ஈடுபட்டு இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com