கடன் தொல்லையால் கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை

கடன் தொல்லையால் கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
கடன் தொல்லையால் கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
Published on

சென்னை ராயபுரம் பிச்சாண்டி லேன் தொப்பை தெருவில் வசித்து வந்தவர் மகசர்அலி (வயது 42). பர்மா பஜார் ஊழியர். இவருடைய மனைவி பர்க்கத்நிஷா (34). இவர்களது மகள் நசீராபானு (15). இவர், தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை வழக்கம்போல் பள்ளி முடிந்து நசீராபானு, வீட்டுக்கு வந்தபோது கதவு உள்புறமாக பூட்டி இருந்தது. நீண்டநேரம் தட்டியும் கதவை திறக்காததால் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தபோது, தனது தாய், தந்தை இருவரும் வீட்டின் உள்ளே தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த ராயபுரம் போலீசார், கணவன்-மனைவி இருவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் தொல்லை காரணமாக கணவன்-மனைவி தற்காலை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் பெற்றோரை இழந்து அவர்களது மகள் நசீராபானு அனாதையான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com