மந்திரி பதவி கிடைக்காததால் அதிருப்தி : ரமேஷ் ஜார்கிகோளி, ராமலிங்கரெட்டியிடம் பேசுவேன் - குமாரசாமி பேட்டி

முதல்-மந்திரி குமாரசாமி பாகல்கோட்டை மாவட்டத்தில் நேற்று சுற்றுப்பயணம் செய்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மந்திரி பதவி கிடைக்காததால் அதிருப்தி : ரமேஷ் ஜார்கிகோளி, ராமலிங்கரெட்டியிடம் பேசுவேன் - குமாரசாமி பேட்டி
Published on

பெங்களூரு,

எனக்கு எதிராக சித்தராமையா வியூகம் வகுத்துள்ளதாக நீங்கள் சொல்கிறீர்கள். வியூகம் வகுப்பது என்பது மனிதனின் சகஜ குணம். இதுபற்றி நான் எதற்காக பேச வேண்டும்?. மேலே ஒருவன்(கடவுள்) இருக்கிறான். அவன் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறான். ரமேஷ் ஜார்கிகோளி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக கூறி இருக்கிறார். அரசியலில் தங்களின் நோக்கம் நிறைவேறாதபோது, சமீபகாலமாக இதுபோன்ற நடவடிக்கைகள் அதிகரித்துவிட்டன.அவரிடம் இதுபற்றி பேசுவேன். காங்கிரசில் எழுந்துள்ள அதிருப்தியை அக்கட்சியின் தலைவர்களே சரிசெய்வார்கள். ரமேஷ் ஜார்கிகோளி, ராமலிங்கரெட்டி உள்ளிட்டோர் எனக்கும் நண்பர்கள். அதனால் தனிப்பட்ட முறையில் அவர்களிடம் நான் பேசுவேன். அடுத்த மாதம் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தை கூட்டி விவாதிப்பேன்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com