கணவர் குடிப்பழக்கத்துக்கு ஆளானதால் விரக்தி பெண் தீக்குளித்து தற்கொலை 3 பேருக்கு வலைவீச்சு

ஊத்துக்கோட்டை அருகே கணவர் குடிபழக்கத்துக்கு ஆளானதால் விரக்தியில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கணவர், மாமியார், மாமனாரை போலீசார் தேடி வருகின்றனர்.
கணவர் குடிப்பழக்கத்துக்கு ஆளானதால் விரக்தி பெண் தீக்குளித்து தற்கொலை 3 பேருக்கு வலைவீச்சு
Published on

ஊத்துக்கோட்டை,

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையை அடுத்துள்ள பென்னாலுர்பேட்டை அருகே உள்ள சீனிவாசபுரம் கிராமம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் வாசு (வயது 38). கொத்தனார். இவரது மனைவி வசந்தி (28). இவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. குழந்தைகள் இல்லை. இதனால் வசந்தி மனஉளைச்சலுடன் காணப்பட்டார். இந்த நிலையில் வாசு மது குடிக்கும் பழக்கத்துக்கு ஆளானார்.

இதனால் வாசு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இது குறித்து கணவர்- மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. இதனிடையே வாசுவின் தந்தை ஆறுமுகம் (58) மற்றும் தாய் முனியம்மாள் (52) ஆகியோர் வசந்தியை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வாசு மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது கணவர், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com